அநுராதபுரத்தில் வெளிநாட்டுப் பெண்ணின் பணப்பை திருட்டு..!!
Read Time:56 Second
அநுராதபுரம் புனித நகரில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணின் பணப் பையை கொள்ளையர் குழுவொன்று நேற்று திருடியுள்ளது.
குறித்த பெண் தமது நண்பியுடன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவரது பணப்பை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட பணப் பையில் எட்டு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடன் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பொருட்கள் இருந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Average Rating