யாழில் காதலியுடன் கோயிலுக்குச் சென்ற குடும்பஸ்தரை புரட்டி எடுத்த மனைவி..!!
காதலியுடன் கோயிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை அவரது மனைவி புரட்டி எடுத்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தெல்லிப்பழையிலுள்ள ஆலயம் ஒன்றில் ஆடிச் செவ்வாய் தினத்தன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒருவர் திருமணமாகி நான்கு வயதுள்ள ஆண் குழந்தைக்கு தகப்பனாக உள்ளார்.
இவர் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணொருவருடன் காதலில் வீழ்ந்துள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்தி கணவன் தனது காதலியுடன் பல இடங்களுக்கும் காரில் சுற்றித் திரிந்துள்ளார்.
அத்துடன் கோபமுற்ற மனைவி, கணவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அத்தோடு அந்தப் பெண்ணையும் நையப்புடைத்துள்ளார்.
இதன் பின்னர் இது தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்படவே இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
Average Rating