தாக்குதல் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்..!!
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் மீது தாக்ககுதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககோரி பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பீடத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் சென்ற யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வர்த்தக பீட மாணவர்கள் அங்கிருந்த மாணவர்கள் மீது சராமரியாக தாக்குதலை நடத்தியதாகவும் இதனால் நான்கு பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் காயமடைந்ததுடன் இருவர் வவுனியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வளாக மாணவாகள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக, யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களால் குருமன்காட்டில் உள்ள அவர்களது வளாகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் பின்னர் பேரணியாக சென்ற மாணவர்கள் மன்னார் வீதி வழியாக சென்று பூங்கா வீதியில் உள்ள வவுனியா வளாக நிர்வாக பிரிவு கட்டிடத்தை சென்றடைந்தனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாக்குதல் நடத்திய காடையர் மீது உடனடியாக விசாரணை செய், மது போதையில் தாக்குதல் நடத்தும் அவர்களை இடைநிறுத்து, பல்கலைக்கழக காவலாளியை மாற்று, மூன்று முறை தெரியப்படுத்தியும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ரவுடிகளுக்கு நிர்வாகம் பயமா? போன்ற வாசகங்கள் தாங்கிய சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக பிரயோக விஞ்ஞானபீட பீடாதிபதி எஸ். குகனேசன் மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கினார்.
Average Rating