இஸ்ரேல் பலஸ்தீன அமைதி பேச்சு 26 கைதிகள் விடுதலை..!!
பலஸ்தீனத்துடனான பேச்சு வார்த்தைக்கு முன்பே இஸ்ரேல், 26 கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னதாக சிறையில் நீண்ட காலம் அடைக்கப்பட்டிருக்கும் 26 கைதிகளை விடுவிக்கப் போவதாக அறிவித்திருந்தது இஸ்ரேல் கிழக்கு ஜெருசலம், மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதியில் புதிதாக குடியேறுவோருக்கான வீடுகள் கட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளது.
இவர்களில் 14 பேர் காஸா பகுதியிலும், 12 பேர் வெஸ்ட் பேங்க் பகுதியிலும் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 வாரத்திற்கு முன்பே 9 மாதங்களில் 4 கட்டங்களாக 104 கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் முடிவு செய்திருந்தது.
இஸ்ரேலில் நேற்று முன்தினம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மொசே யாலேன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீதி அமைச்சர் ஜிப்சி லிவ்னி உட்பட பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் பெஞ்சமின் அண்மையில் நெதன்யாகு ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதற்கு பலஸ்தீனிய ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் பதில் அளித்தபோது, விடுவிக்கப்பட்ட எந்த கைதியும் பலஸ்தீனத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என உறுதி அளித்துள்ளார்.
நாளை ஜெருஸலத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் நீதி அமைச்சர் லிவ்னி மற்றும் பலஸ்தீனிய தரப்பில் சயீப் எரிகட் கலந்து கொள்கிறார்கள்.
Average Rating