யாழ்ப்பாணத்தில் சிறுவனைக் காணவில்லையென முறைப்பாடு..!!
Read Time:1 Minute, 11 Second
யாழ். வடமராட்சிப் பகுதியில் மாலைநேர தனியார் வகுப்பிற்கு சென்ற சிறுவன் ஒருவனைக் காணவில்லையென உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் .பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
வரமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி நிலக்ஷன் (வயது 13) என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி மாலைநேர வகுப்பிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை என சிறுவனின் சகோதரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச் சிறுவன் வடமராட்சி கரணவாய் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating