துறைமுகத்தை வியாழன்வரை பொதுமக்கள் பார்வையிட முடியும்..!!

Read Time:1 Minute, 59 Second

download (13)ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் திறந்து வைக்­கப்­பட்ட கொழும்புத் துறை­மு­கத்தின் தெற்கு நுழைவாயி­லு­ட­னான தங்க நீர்த்­து­றையை பொது­மக்கள் பார்­வை­யிடும் காலப்­ப­குதி நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்றுமாலை 5 மணி­வரை மாத்­தி­ரமே மேற்­படி துறை­மு­கத்தை பொது­மக்கள் பார்­வை­யிட முடியும் என வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் நாளை 15ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை வரை பொது­மக்கள் பார்­வை­யி­டு­வ­தற்­காக திறந்­தி­ருக்கும் என துறை­முக அதி­கார சபை அறி­வித்­துள்­ளது.

கடந்த 5ஆம் திகதி உத்­தி­யோக பூர்­வ­மாக திறந்து வைக்­கப்­பட்ட மேற்­படி துறை­மு­கத்தை பொது­மக்கள் பார்­வை­யி­டு­வ­தற்­கென 8ஆம் திகதி முதல் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் நேற்று மாலை வரையில் 50 இலட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் துறை­மு­கத்தை பார்­வை­யிட்­டி­ருப்­ப­தாக அதி­கா­ர­சபை மேலும் தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

இதே­வேளை, நேற்­றைய தினம் நாட்டின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் புதிய துறை­மு­கத்தை நோக்கி பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வாக­னங்கள் உள்­நு­ழைந்­ததால் தலை­ந­கரில் கடு­மை­யான வாகன நெரிசலும் ஏற்பட்டது.

கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, காலிமுகத்திடல் உள்ளிட்ட பிரதேசங்களிலேயே வாகன நெரிசல் அதிகரித்திருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயுத முனையில் கடத்தப்பட்ட கார் கொடக்கவேல பகுதியில் மீட்பு….!!
Next post தபால் மூலம் வாக்களிக்க 100,000க்கு மேற்பட்டோர் விண்ணப்பம்..!!