துஷ்பிரயோத்திற்குள்ளான பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி..!!
Read Time:1 Minute, 8 Second
கிளிநொச்சி பூநகரி வினாசியோடை பகுதியில் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பனை ஓலை சேகரிப்பதற்காக சென்ற போது குறித்த பெண் இரண்டு நபர்களால் நேற்று மாலை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தொரிவித்துள்ளது.
பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர
Average Rating