ஆயுத முனையில் கடத்தப்பட்ட கார் கொடக்கவேல பகுதியில் மீட்பு….!!
Read Time:1 Minute, 17 Second
ஹொரனை பிரதேசத்தில் வைத்து ஆயுதமுனையில கடத்திச் செல்லப்பட்ட காரை இரத்தினபுரி கொடக்கவெல பிரதேசத்தில் வைத்து கொடக்கவெல பொலிஸார் கடந்த 12ஆம் திகதி மீட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து வாடகைக்கு காரொன்றை அமர்த்தி வந்த நபரொருவர் ஹொரணையில் வைத்து கார்ச் சாரதியைத் தாக்கி விட்டு ஆயுத முனையில் காரைக் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட மோட்டார் காரை இரத்தினபுரி கொடக்கவெல பிரதேசத்தில் வைத்து கொடக்கவெல பொலிஸார் 12ஆம் திகதி மாலை மீட்டுள்ளனர். அத்தோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எம்பிலிபிட்டிய சூரியவெல பிரதேசத்தைச் சேர்ந்தவரென விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேற்படி சம்பவம் குறித்து கொடக்கவெல பொலிஸார் தேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Average Rating