வடமராட்சியில் கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்பு..!!
Read Time:1 Minute, 24 Second
யாழ் வடமராட்சியில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில். இப்பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என இராணுவம் காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
நேற்றுக்காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 15 வருடங்களுக்கு பின்னர் இந்த காணிகளும், வீடுகளும் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள வழங்கப்பட்டிருந்தன.
எனினும் நேற்றுக் காலை அதன் கிணறு ஒன்றை சுத்தம் செய்யும் போது, அதில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து இராணுவம் ஏனைய கிணறுகளையும் சோதனை இட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating