சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 66 வயதான பௌத்தபிக்கு கைது..!!

Read Time:2 Minute, 31 Second

download (16)15 வயது வயது சிறு­மியை  பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் 66 வய­தான பௌத்த பிக்கு ஒரு­வரை மத­வாச்­சிய பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

வவுனியா மத­வாச்­சிய, யக்­கா­வல பிர­தே­சத்தை சேர்ந்த விகா­ரை­யொன்றின் விகா­ரா­தி­ப­தி­யா­க­வுள்ள பௌத்த பிக்கு ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார்.

அதே பகு­தியை சேர்ந்த இந்த யுவ­திக்கு சாந்தி பூஜை செய்து தாயத்து அணிய வேண்­டு­மென இந்த பிக்கு சிறுமியின் தாயா­ரிடம்  தெரி­வித்­துள்ளார்.

கடந்த 2 ஆம் திகதி இரவு சாந்தி  பூஜை செய்ய வேண்­டு­மெனத் தெரி­வித்து சிறுமியை விகா­ரைக்கு அழைத்து வரும்­படி சந்­தேக நப­ரான பிக்கு தாயிடம் கூறி­யுள்ளார்.

தாய் யுவ­தியை விகா­ரைக்கு அழைத்துச் சென்ற போது தம்மை அறைக்கு வெளியே இருக்­கும்­படி கூறி யுவ­தியை சந்­தேக நப­ரான பிக்கு அறைக்கு அழைத்துச் சென்­ற­தா­கவும் கடந்த 9 ஆம் திகதி மத­வாச்­சிய  பொலிஸ்  நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

நீண்ட நேரத்தின் பின்னர் சந்­தேக நப­ரான பிக்­கு­வுடன் அறையை விட்டு வெளியே வந்த யுவதி அறைக்குள் வைத்து பிக்கு தம்மை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­ய­தாக தம்­மிடம் தெரி­வித்­த­தா­கவும் தாய் முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்ளார்.

கைது  செய்­யப்­படும் போது சந்­தேக நப­ரான பிக்கு தம் மீது முறைப்­பாட்­டா­ளர்கள் வீணாக குற்றம் சுமத்­து­வ­தாக பொலி­ஸா­ரிடம் தெரிவித்துள்ளனர். யுவதியை  வைத்திய பரிசோதனைக்காக பொலிஸார் அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடமராட்சியில் கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்பு..!!
Next post மர அலுமாரி விழுந்ததில் சிறுமி பலி..!!