சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 66 வயதான பௌத்தபிக்கு கைது..!!
15 வயது வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்ப
வவுனியா மதவாச்சிய, யக்காவல பிரதேசத்தை சேர்ந்த விகாரையொன்றின் விகாராதிபதியாகவுள்ள பௌத்த பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
அதே பகுதியை சேர்ந்த இந்த யுவதிக்கு சாந்தி பூஜை செய்து தாயத்து அணிய வேண்டுமென இந்த பிக்கு சிறுமியின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி இரவு சாந்தி பூஜை செய்ய வேண்டுமெனத் தெரிவித்து சிறுமியை விகாரைக்கு அழைத்து வரும்படி சந்தேக நபரான பிக்கு தாயிடம் கூறியுள்ளார்.
தாய் யுவதியை விகாரைக்கு அழைத்துச் சென்ற போது தம்மை அறைக்கு வெளியே இருக்கும்படி கூறி யுவதியை சந்தேக நபரான பிக்கு அறைக்கு அழைத்துச் சென்றதாகவும் கடந்த 9 ஆம் திகதி மதவாச்சிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நீண்ட நேரத்தின் பின்னர் சந்தேக நபரான பிக்குவுடன் அறையை விட்டு வெளியே வந்த யுவதி அறைக்குள் வைத்து பிக்கு தம்மை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்ப
கைது செய்யப்படும் போது சந்தேக நபரான பிக்கு தம் மீது முறைப்பாட்டாளர்கள் வீணாக குற்றம் சுமத்துவதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். யுவதியை வைத்திய பரிசோதனைக்காக பொலிஸார் அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
Average Rating