இந்திய கடற்படை கப்பலில் தீ விபத்து..!!
இந்தியா, தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது காணாமல் போன 18 வீரர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.சிந்து ராக்சாக் என்ற நீர்மூழ்கிக் கப்பலிலேயே நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
16 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்த தீ விபத்தினால் நீர்மூழ்கிக் கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார.;
மேலும், இந்த தீ விபத்திலிருந்து தங்களை பாதுகாக்கும் முகமாக பல வீரர்கள் நீரினுள்; குதித்ததாகவும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர
Average Rating