கராச்சியில் ஷியா பிரிவினர்மீது கையெறி குண்டு தாக்குதல்: இருவர் பலி..!!

Read Time:1 Minute, 35 Second
download (5)கராச்சியில் ஷியா பிரிவினர்மீது கையெறி குண்டு தாக்குதல்: இருவர் பலி-

பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் மட்டும் 2 கோடிக்கு மேல் மக்கள் வசிக்கின்றனர்.

இங்கு வாழும் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து நேற்று கையெறிக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

கரிமாபாத் பகுதியில் ஷியா முஸ்லிம்களின் உட்பிரிவான இஸ்மாயிலி பிரிவை சேர்ந்தவர்கள் தொழுகை நடத்தினர். அந்த இடத்தில் முதலாவதாக நேற்று கையெறிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஒரு பெண், ஒரு குழந்தை என இருவர் கொல்லப்பட்டனர். 26 பேர் காயமடைந்தனர்.

இரண்டாவதாக, மெட்ரோவில்லே மாவட்டத்தில் இதே இஸ்மாயிலி பிரிவினர் தொழுகை நடத்திய இடத்திலும் மற்றொரு கையெறிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

பிரிவினை வாத மற்றும் அரசியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள கராச்சியில் கொலை, கடத்தல் சம்பவங்கள் நடப்பது சர்வசாதரணம் என்று கூறப்படுகிறது
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியவரை தேடி வலைவீச்சு..!!
Next post அமெரிக்காவில் லீவு அன்றைக்கு ‘சுதந்திர தினம்..!!