சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியவரை தேடி வலைவீச்சு..!!
Read Time:1 Minute, 2 Second
10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை வெலிமட பொலிஸார் தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து நேற்றைய தினமே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேகநபர் தேடப்பட்டு வருகிறார்.
சந்தேகநபர் ஊவாபரணகம – லுனுவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வெலிமட டயரபா பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating