ரயில் பயணியிடம் திருடிய இராணுவ வீரர் விளக்கமறியலில்..!!
Read Time:1 Minute, 15 Second
ரயிலில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபா அடங்கிய பேர்ஸொன்றை திருடிய இராணுவ வீரரொருவரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி கல்கிஸை நீதவான் ரங்க விமலஹேன உத்தரவிட்டார்.காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த சமுத்திரதேவி ரயிலில் களுத்துறை ரயில் நிலையத்தில் ஏறிய இந்த இராணுவ வீரர் ரயிலில் பயணம் செய்த வியாபாரியொருவரிடமிரு ந்த பேர்ஸை திருடியுள்ளார்.
கலவரமுற்ற வியாபாரி இராணுவ வீரரிடம் வாக்குவாதப்பட்டபோது அருகிலிருந்த பயணிகள் அவரைப் பிடித்து இரத்மலானை ரயில் நிலையத்தில் வைத்து இந் நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நபர் கொம்பனித் தெரு இராணுவ முகாமில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Average Rating