மாணிக்கக்கற்களை எடுத்துச் செல்ல முயற்சித்த சீனப் பெண் கைது..!!
Read Time:1 Minute, 15 Second
சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த சீனப் பெண் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 1.25 மணி அளவில் சந்தேகநபரான பெண் கட்டுநாக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி கூறியுள்ளார்.
சந்தேகநபரான பெண் தமது பயணப் பைக்குள் 40 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய இரத்தினக்கற்கள் மறைத்து சீனாவுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
35 வயதான குறித்த சீனப் பெண் கடந்த 6 மாதங்களில் 4 தடவைகள் இலங்கைக்கு வந்துள்ளமை விசாரணைளின்போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
Average Rating