நடுவானில் விமானத்தில் பிறந்த ‘குட்டிப்பையன்..!!

Read Time:1 Minute, 54 Second

imagesமொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு விமானத்தில் வைத்து அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த ஞாயிறன்று, வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோ நாட்டின் காசாபிளாங்கா நகரில் இருந்து இத்தாலியில் உள்ள பொலோக்னாவுக்கு புறப்பட்டது ராயல் ஏர் மொராக் என்ற விமானம்.

அதில், பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு விமானம் நடுவானில் பறாந்து கொண்டிருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.தகவல் அறிந்த விமானி, பார்சலோனா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, அங்கு தற்காலிகமாக தரை இறங்க அனுமதி கேட்டார்.

ஆனால், அதற்குள் விமானத்தில் வைத்தே அப்பெண்ணிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.பின்னர் பார்சலோனாவில் தரையிறங்கியது விமானம். பின்னர், அங்கிருந்த ஆம்புலன்ஸ் உதவியோடு தாயும், மகனும் சண்ட் ஜோன் டி டியு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

தற்போது தாயும், சேயும் ஆரோக்கியமாக உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.டிக்கெட் எடுக்காமல் திடீரென் விமானத்தில் பிறந்த அந்த ‘குட்டி’ பையனால் விமானம் 50 நிமிடங்கள் தாமதமாக பொலோக்னாவிற்கு புறப்பட்டுச் சென்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனிதன் பறக்கும் உடை தயாரிப்பு..!!
Next post சீனாவில் 26வது ‘மொட்டை’ மாடியில் செயற்கை மலை..!!