தமிழர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் மெட்ராஸ் கபேக்கு தடை கோரிய மனு ரத்து..!!

Read Time:1 Minute, 42 Second

1727284212imgமெட்ராஸ் கபே என்ற ஹிந்தி திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.

சட்டத்தரணி எழிலரசு தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ்.மணிக்குமார் விசாரித்துள்ளார்.

மனுவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி மனுவை நீதிபதி ரத்து செய்துள்ளார்.

மனு விவரம்: ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்த ‘மெட்ராஸ் கபே´ திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் திகதி வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களை தீவிரவாதிகள் போன்று சித்திரித்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய அமைதிப் படைக்கு எதிராக தமிழர்கள் செயல்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த படம் வெளியிடப்பட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படத்தைத் தயாரிக்க நிதியுதவி செய்துள்ளார்.

எனவே, திரைப்படத்தை தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து மறு தணிக்கை செய்ய வேண்டும்.

அதுவரையில் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 சிறார்கள் துஷ்பிரயோகம்; ஐ.ம.சு.மு உறுப்பினர்மீது முறைப்பாடு..!!
Next post கொக்கிளாய் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஆளும் கட்சி வேட்பாளர்..!!