பத்தன பகுதியில் ஒருவர் போத்தலால் குத்திக்; கொலை..!!
Read Time:54 Second
நுவரெலியா, ஹட்டன் திம்புள, பத்தன பகுதியில் போத்தலால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையிலிருந்த பிரதேசவாசி ஒருவருடன் நேற்று மாலை ஏற்பட்ட தகராறை அடுத்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தின் போது கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த நபர் கொட்டகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Average Rating