யானையை விரட்ட துப்பாக்கிப் பிரயோகம்..!!

Read Time:1 Minute, 31 Second

download (10)யால சரணாலயத்திற்குள் கெமுனு என்றழைக்கப்படும் யானையை விரட்டுவதற்காக இராணுவ உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சரணாலயத்திற்குள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டி.ரத்நாயக்க கூறியுள்ளார்.

யால சரணாலயத்திற்குள் இராணுவ உறுப்பினர்கள் சிலர் பயணித்த ஜீப் வாகனம் அருகிற்கு குறித்த யானை சென்றபோது இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் கெமுனு என்றழைக்கப்படும் யானைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் கிடைத்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணக்களம் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷாருக்கானுக்கு லுங்கி அணிவித்த தீபிகா..!!
Next post துப்பாக்கிச் சூட்டில் விமானப்படை வீரர், வீராங்கனை உயிரிழப்பு.!!