81 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவரைக் கைது செய்யக் கோரி ஆர்பாட்டம்..!!

Read Time:2 Minute, 13 Second

download (15)கள்­ளத்­தொ­டர்பு வைத்­தி­ருந்த பெண்ணின் 81 வய­தான பாட்­டியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய நபரைப் பொலிஸார் கைது செய்­யா­த­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து குரு­நா­கலை எல்லை வழி­யாக அநு­ரா­த­புரம் செல்லும் வீதியை மறித்து பிர­தே­ச­வா­சிகள் கடந்த 17ஆம் திகதி ஆர்ப்­பாட்­ட­மொன்றை நடத்தியுள்ளனர்.

பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 81 வயது பாட்­டி­யும் ஆர்ப்­பாட்டம் நடை­பெறும் இடத்­துக்கு அழைத்துவரப்­பட்­டி­ருந்தார்.

சந்­தே­க­நபர் மணல் வர்த்­த­கத்தில் ஈடு­ப­டு­ப­வ­ரென்றும் பிர­தேச பொலி­ஸா­ருடன் நெருங்­கிய தொடர்பு வைத்­திருந்ததால் பொலிஸார் இந்த நபரை கைது­செய்­வதைத் தவிர்த்து வரு­வ­தா­கவும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் குற்றம் சாட்­டி­யுள்­ளனர்.

10 ஆம் திகதி நடை­பெற்­றுள்ள இந்த வல்­லு­றவுச் சம்­பவம் குறித்து 11 ஆம் திகதி மஹவ பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் இது­வரை பெலிஸார் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் தெரி­வித்துள்ளனர்.

ஒரு மணி­நேரம் ஆர்ப்­பாட்டம் நடை­பெற்­றதால் போக்­கு­வ­ரத்து ஸ்தம்­பித்­தது. இத­னை­ய­டுத்து ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்ற இடத்­துக்கு வந்த மஹவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சந்­தேக நபரைக் கைது செய்ய பொலிஸ் குழு­வொன்று ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­த­த­தை­ய­டுத்து ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியப் பிரதமருடன் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு பொதுநலவாய மாநாட்டுக்கும் அழைப்பு..!!
Next post வாள்வெட்டுக்கு இலக்கான ஆளும் கட்சி உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி..!!