81 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவரைக் கைது செய்யக் கோரி ஆர்பாட்டம்..!!
கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் 81 வயதான பாட்டியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரைப் பொலிஸார் கைது செய்யாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து குருநாகலை எல்லை வழியாக அநுராதபுரம் செல்லும் வீதியை மறித்து பிரதேசவாசிகள் கடந்த 17ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 81 வயது பாட்டியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் மணல் வர்த்தகத்தில் ஈடுபடுபவரென்றும் பிரதேச பொலிஸாருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால் பொலிஸார் இந்த நபரை கைதுசெய்வதைத் தவிர்த்து வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
10 ஆம் திகதி நடைபெற்றுள்ள இந்த வல்லுறவுச் சம்பவம் குறித்து 11 ஆம் திகதி மஹவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பெலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வந்த மஹவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
Average Rating