தனியார் வகுப்பு? காதலர்களுடன் ஜீப்பிலிருந்த மாணவிகள்..!!
Read Time:1 Minute, 18 Second
தனியார் வகுப்பொன்றுக்கு செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய 16 வயது மாணவிகள் இருவர் தங்களது காதலர்களுடன் ஜீப் வண்டியில் இருந்தபோது 17 ஆம் திகதி கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்ட்ட மாணவிகளும் அவர்களது காதலர்களும் பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்ட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மாணவிகள் இருவரும் பல்லேபொல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். 24 வயதான இளைஞர்கள் இருவரும் சிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
ஒரு இளைஞரின் ஜீப் வண்டியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாணவிகள் இருவர் இளைஞர்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொள்வதாக கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்ட்டனர்.
Average Rating