திடீரென உயிரிழந்த சிறுமி கொலை செய்யப்பட்டமை உறுதி..!!
Read Time:1 Minute, 17 Second
பதுளை வெலிமடை பகுதியில் மர்மமான முறையில் சிறுமி தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெலிமடை பொரகஸ் பகுதியைச் சேர்ந்த ஒன்றறை வயதான சிறுமி கடந்த 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வைத்தியர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating