பிசாசுகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பொலிஸார், இராணுவம் உதவி..!!

Read Time:2 Minute, 42 Second

images (7)மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புச்சாக்கேணி எனும் கிராமத்தில் மந்திரவாதிகளினால் ஏவப்பட்ட பிசாசுகளினால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றின் துன்ப நிலையை குணப்படுத்தும் நடவடிக்கையில் அப்பகுதி இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று மாலை ஈடுபட்டிருந்தனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, மேற்படி கிராமத்தில் வசித்துவரும் 5பேர் கொண்ட குடும்பத்தில் நீண்டகாலமாக நோயும், அவலச் சத்தமும், அடிக்கடி பேய் பிடித்து பயங்கரமான உணர்வு ஏற்பட்டால் போல் தங்களை மறந்த ஆடுதல் போன்ற செயற்பாடுகள் அடிக்கடி இடம்பெற்று வந்தது வழக்கமாகும்.

இவர்களுக்கு இப் பரிதாபகரமான நிலைமை ஏற்பட்டுள்ளமை அப்பகுதி மக்களிடம் ஆச்சரியத்தினையும் கவலையையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனை குணப்படுத்த பிரதேச பூசகர்கள் மற்றும் மந்திரவாதிகளிடம் சென்றும் பலனின்றி போயுள்ளது.

இந் நிலைமையினால் குடும்பத் தலைவன் தொழிலுக்கு செல்ல முடியாமலும் பிள்ளைகள் பாடசாலை சென்று கல்வி கற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டிருந்தது.

மேற்படி குடும்பத்தின் சம்பவங்களை நேரில் கேட்டும் கண்டறிந்தும் கொண்ட இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து நோயினை குணப்படுத்தும் முகமாக பிரபல்யமிக்க மாவத்தகம ஆனந்த ஹாமதுருவோ மற்றும் அளுத்கம பன்சாரோ ஹாமதுருவோ ஆகியோர்களை அழைத்து வந்து பூசை வழிபாட்டினை மேற்கொண்டிருந்தனர்.

இச் செயற்பாட்டினை பிரதேச பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

பூசை நடவடிக்கையின்போது குடும்பத்தார் அனைவரும் பேய் பிடித்து ஆடியதுடன் அவர்களிடம் பிடித்திருந்த பேய்கள் ஓட்டப்பட்டுள்ளமையையும் உணரமுடிந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தோர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டமைப்பு வேட்பாளரின் வாகனம்மீது தாக்குதல்..!!
Next post விஜித தேரர்மீது இனம் தெரியாத குழு தாக்குதல்..!!