திகாம்பரத்தின் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்..!!
Read Time:1 Minute, 13 Second
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் நடாத்திச் செல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பிர் பி.திகாம்பரத்தின் கட்சி அலுவலகங்கள் சில தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொகவந்தலாவை அலுவலகம் நேற்று முன்தினம் இரவு தாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹட்டன் பகுதியிலுள்ள அவர்களின் கட்சி அலுவலகமொன்று நேற்று முன்தினம் இரவு தாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாகாண சபை வேட்பாளர் சரஸ்வதி சிவகுருவின் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவரின் வர்த்தக நிலையமொன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Average Rating