மூன்று வாரங்களுக்கு நுரைச்சோலை அனல் மின் நிலையம் பூட்டு..!!
Read Time:1 Minute, 5 Second
புத்தளம் மாவட்டம் கற்பிட்டி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் மூன்று வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 21ம் திகதி தொடக்கம் நுரைச்சோலை அனல் மின் நிலையம் மூன்று வாரங்கள் மூடப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அனல் மின் நிலையத்தை 2ம் கட்டத்துடன் இணைக்கும் நோக்கில் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
மின்சாரம் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதால் தடையின்றி மின்சார விநியோகம் செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Average Rating