பன்னாலையில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்..!!
Read Time:1 Minute, 18 Second
யாழ். பன்னாலைப் பகுதியில் நேற்றுமாலை தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
மகாதேவன்(ஜே.பி) அவர்;களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், புளொட் தலைவருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், ஊர்ப் பிரமுகர்களும் உரையாற்றினார்கள்.
இங்கு உரையாற்றிய திரு.சித்தார்த்தன் அவர்கள், வட மாகாணசபைத் தேர்தலில் பெருந்தொகையாக மக்கள் சென்று வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய பெற்றியினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் கட்சிப் பிரதிநிதிகள், உள்ளுராட்சி சபைகளின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
Average Rating