அவப்பெயரை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் அவதானம்..!!
Read Time:1 Minute, 2 Second
நாட்டின் நட்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்ற நபர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தொடர்பில் பாதுகாப்பு படையினர் அவதானம் செலுத்தி வருவதாக கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலயவாய நாடுகளின் மாநாடு மற்றும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகை போன்றவற்றை மையப்படுத்தி, நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating