பொட்டம்மானின் சகோதரன் மாரடைப்பால் மரணம்..!!

Read Time:1 Minute, 33 Second
download (5)தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானின் சகோதரர் சண்முகலிங்கம் ஞானகுமார் – வயது 52 மாரடைப்பால் இறந்து உள்ளார்.
போருக்கு பிந்திய யாழ்ப்பாணத்தின் அமைதிச் சூழலை அனுபவிக்கின்றமைக்காக இரு மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனில் இருந்து வந்து அரியாலையில் நாயன்மார்கட்டில் குடியேறினார்.
இந்நிலையில் இராணுவ புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்து உள்ளார்.
வீட்டில் இருந்து வெளியேறிய பின் திரும்பி வந்த இவர் நெஞ்சு வலியால் அவதி அடைந்து காணப்பட்டார் என்றும் அயல் வீட்டுக்காரர்களிடம் இருந்து தண்ணீர், வெந்நீர் பெற்று குடித்தபோதிலும் குணமாகவில்லை என்றும் இதனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்து போனார் என்றும் தெரிகின்றது.
மாரடைப்புக்கு காலம் தாழ்த்தி சிகிச்சை பெற வந்தமையால் ஏற்பட்ட இயற்கை மரணம் இது என்று வைத்திய நிபுணர்கள் அறிவித்து உள்ளார்கள்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தை மற்றும் மகள்மீது கத்திவெட்டு மகள் உயிரிழப்பு..!!
Next post சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக மேஜர்ஜெனரல் மல்லவராச்சி நியமனம்..!!