பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்..!!
Read Time:1 Minute, 16 Second
வவுனியா ஈஸ்வரிபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா ஈஸ்வரிபுரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உறவினரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து எனக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வவுனியா பொலிஸாரும் இச்சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
Average Rating