வவுனியா பாரதிபுரம் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்..!!
Read Time:1 Minute, 52 Second
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்; நேற்றுபிற்பகல் வவுனியா பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன், நண்பர்களும், ஆதரவாளர்களும்;, ஊர்ப் பிரமுகர்களும் பிரதேச மக்களுடனான இந்த கலந்துரையாடலை நடத்தியிருந்தனர்.
இதேவேளை நேற்றுமாலை 4 மணியளவில் வவுனியா விநாயகபுரம் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் தேர்தல் கருத்தரங்கொன்றினை நடத்தியிருந்தார்.
வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன், ஆதரவாளர்களும், நண்பர்களும், ஊர்ப் பிரமுகர்களும்,; இந்த கருத்தரங்கினை முன்னெடுத்திருந்தனர்.
இதில் விநாயகபுரத்தைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் பங்கேற்றிருந்தனர்.
இங்கு உரைநிகழ்த்திய யாவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பெரும்பான்மையாக வெற்றிபெறச் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும், தமிழ் மக்கள் அனைவரும் மிகவும் அக்கறையெடுத்து வாக்களிக்க செல்ல வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.
Average Rating