சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: நுவரெலியா பிரதி மேயருக்கு விளக்கமறியல்..!!
Read Time:1 Minute, 1 Second
நுவரெலியா பிரதி மேயர் திஸ்ஸ செனவிரத்ன, நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று சரணடைந்துள்ளார்.
சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் திஸ்ஸ செனவிரத்னவை கைது செய்வதற்கு நுவரெலியா நீதவான் கடந்த 19ஆம் திகதி பிடியாணை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் நீதிமன்றில் சரணடைந்த நுவரெலியா பிரதி மேயரை எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் திஸ்ஸ செனவிரத்ன ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மீது துஸ்பிரயோகம் புரிந்துள்ளதாக பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
Average Rating