சிறுபான்மையின பெண்கள் இருவருக்கு விருதுகள்..!!

Read Time:2 Minute, 44 Second

Jazima_Ismail GA(5)2012, 2013 ஆண்டின் சிறந்த பெண்மணிகளுக்கான விருது சிறுபான்மை இனத்தினை சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த பெண்மணிக்கான விருது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கும் சிறந்த பெண் தொழில்வல்லுனரிற்கான விருது தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் தேசபந்து ஜெஸீமா இஸ்மாயிலிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா எனும் தலைப்பிலான இந்த விருது வழங்கல் நிகழ்வினை பெண்களுக்கான முகாமைத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரத அதிதியாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த கலந்துகொண்டிருந்தார்.

இதன்போதே சிறந்த பெண்மணிக்கான விருது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கும் சிறந்த பெண் தொழில்வல்லுனரிற்கான விருது தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் தேசபந்து ஜெஸீமா இஸ்மாயிலிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விருதினை பெற்ற மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு காவியா பெண்கள் அமைப்பு, மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் மற்றும மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திற்கு முன்னாள் வரவேற்கப்பட்ட மாவட்ட செயலாளர் ஊர்வலமாக மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்னாள் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வன்னியில் இருந்து மேலும் 45 தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைவு..!!
Next post மணபந்தத்தில் மோப்பநாய்கள்; தேனிலவுக்கும் அனுப்பிவைப்பு..!!