மணபந்தத்தில் மோப்பநாய்கள்; தேனிலவுக்கும் அனுப்பிவைப்பு..!!
Read Time:1 Minute, 19 Second
கண்டி, அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவைச்சேர்ந்த மோப்பநாய்களில் 8 ஜோடி நாய்களுக்கு இன்று திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பிரதானிகள் முன்னிலையிலேயே திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இந்த திருமண வைபவத்தில் கலந்துகொண்டவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் பாற்சோறு விருந்துபசாரம் வழங்கப்பட்டது.
திருமண பந்தத்தில் இன்று இணைந்துகொண்ட மோப்பநாய்களில் மூன்று ஜோடி நாய்கள் தேனிலவுக்காக நுவரெலியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பொலிஸ் சேவைக்காக 100 மோப்பநாய்கள் வெளிநாடுகளிலிருந்து அஸ்கிரியவுக்கு கொண்டுவரப்பட்டன.
இந்த மோப்ப நாய்களின் ஊடாக அந்த இனத்தை பெருக்கிக்கொள்ளும் நோக்கிலேயே திருமண ஏற்பாடுகள் நடத்திப்பட்டதாக அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவு அறிவித்துள்ளது.
Average Rating