முஸ்லிம் பெண்ணாக வேடமணிந்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இராணுவ அதிகாரி-
முஸ்லிம் பெண்மணி ஒருவரைப் போன்று மாறு வேடமணிந்த நிலையில் கண்டியில் உள்ள தேசிய சேமிப்பு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வேளையில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டிருந்த இலங்கை இராணுவ பொதுச்சேவை தொண்டர் படைப்பிரிவின் இராணுவ அதிகாரியான கப்டன் ஏ.எம்.யூ.சமரக்கோன் இராணுவ சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இராணுவ நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிவில் சமூகத்தில் இடம்பெற்றுள்ள குற்றவியல் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரியின் வழக்கு பொலிஸாரால் தண்டனைக் கோவையின் கீழ் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வரும் அதேவேளையில் மேற்படி செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட இராணுவ அதிகாரியொருவரை இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்துவது இதுவே முதற் தடவையாகும்.
மேற்படி நீதிமன்ற விசாரணையை உடனடியாக நடாத்துமாறு இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க இராணுவ காரியாலயத்தைப் பணித்துள்ளார். சிவில் சமூகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினருக்கு இராணுவம் தயவு தாட்சண்யம் காட்டுவதேயில்லையென இராணுவ ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Average Rating