அரசியல் தோல்விகளுக்கு பொது மக்கள் மீதான படுகொலைகளின் மூலம் தீர்வுகாண முனைகின்றனர் பிரபா குழுவினர் – தூயவன்

Read Time:3 Minute, 16 Second

Tmvp-uruthira.jpg15-06-2006 அனுராதபுரம் கப்பட்டிகல்லாவ பகுதியில் சிங்கள இனச் சகோதரப் பயணிகள் மீது பிரபா குழுவினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் மிக வன்மையாக கண்டிக்கின்றோம். கோல்லப்பட்ட, காயமடைந்த சகோதரர்களின் துயரங்களில் நாங்களும் பங்கு கொள்கின்றோம் என கருணாஅம்மான் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் து}யவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சமாதானம் தொடர்பான நிச்சயமற்ற சூழ்நிலை காணப்படும் இச் சந்தர்ப்பத்தில் படுகொலைகள் நிலைமையை இன்னும் மோசமாக்குவதுடன் இன வன்முறைகளையும் தோற்றுவிக்கலாம். இதனை எதிர்பார்த்து பிரபா குழுவினர் மிருகத்தனமான படுகொலைகளைச் செய்துள்ளனர். நாகாPகமுள்ள மனித சமூதாயத்தின் சிந்தனைத் திறனுக்கு அப்பாற்பட்ட படுகொலைகள் யாராலும் ஏற்றுக்கொள்ளவோ அங்கிகரிக்கவோ முடியாது. குற்றவாளிகள் இவர்கள் தான் என இனம் காணப்பட்ட பின் அவர்கள் தண்டனையில் இருந்து தப்புவது மக்கள் மத்தியில் நீதி குறித்த சந்தேகத்தை தோற்றுவிக்கலாம். எனவே படுகொலைகளுக்கு அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியுடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமக்கு சர்வதேச, தேசிய hPதியில் ஏற்படும் அரசியல், இராணுவத் தோல்விகளுக்கு பொது மக்கள் மீதான படுகொலைகள் மூலம் தீர்வுகாண முனைகின்றனர் பிரபா குழுவினர். ஜரோப்பிய யூனியன் பயங்கரவாத முத்திரை குத்திய பின் சர்வதேசத்தை திசைதிருப்ப ஒஸ்லோ பேச்சு எனும் நாடகத்தை அரங்கேற்றி அதனை முறித்துக் கொண்ட பிரபா குழுவினர் கிழக்கில் மிகப் பாரிய இராணுவத் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில் நாட்டில் ஒரு ஸ்திரமற்ற நிலையை உருவாக்கி தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இப் படுகொலையை நடாத்தியுள்ளனர்.

இப் படுகொலை கமாவாகத் தொடராமல் முற்றுப் புள்ளி போல் நிறைவடைவதற்கு பிரபா குழுவினருக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் து}யவன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இனத்துவேச மோதல்களை ஏற்படுத்தும் சதித்திட்டமே கெப்பிட்டிகொல்லாவை தாக்குதல்
Next post இலங்கை கடலில் பயங்கர சண்டை: 25 புலிகள், 4 கடற்படையினர் பலி