அழைப்பு கிடைத்தால் பொன்சேகா நவநீதம்பிள்ளை சந்திப்பு..!!

Read Time:1 Minute, 29 Second

images (2)இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் சந்திப்பு நடத்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமாகவிருந்தால் அவர் நவநீதம்பிள்ளையுடன் சந்திப்பு நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியின் ஊடகச் செயலாளர் சஞ்ஜீவ சமரசிங்க தெரிவிக்கையில்;

நவநீதம்பிள்ளையுடன் சந்திப்பு நடத்துவது தொடர்பாக பொன்சேகாவுக்கு எவ்வித  அழைப்பும் விடுக்கப்படவில்லை.

அவ்வாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்படுமாகவிருந்தால் சந்திப்பு நடத்த அவர் தயாராகவே உள்ளார்.

இதேவேளை நவநீதம்பிள்ளை பொன்சேகாவுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக அவர் இலங்கைக்கு வரமுன்னர் சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

ஆனால் அது தொடர்பாக பொன்சேகாவுக்கு எந்த அறிவித்தலும் கிடைத்திருக்கவில்லை என சஞ்ஜீவ சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோர் அசிரத்தை; பொலிஸார் மாணவர்களை அழைத்து வருகை..!!
Next post இரு பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை..!!