இரு பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை..!!
Read Time:50 Second
களுத்துறை தெற்கு, அதிகாரிகொட, அளுத்வத்த பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்றிரவு 8.30 அளவில் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தப் பெண்ணின், கணவரால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதுடன், களுத்துறை தெற்கு பொலிஸார் இந்தக் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating