போலி 03 இலட்சம் ரூபாவுக்கு ரூ. 01 இலட்சம் தருமாறு மிரட்டல்..!!

Read Time:1 Minute, 38 Second

images (2)ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான உண்மையான நாணயத் தாள்கள் தந்தால் போலியான மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள் தரப்படுமென்று புத்தளத்திலுள்ள வர்த்தகரொருவரு க்கு தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது.

அழைப்பை ஏற்றுக் கொண்ட வர்த்தகருக்கு கடந்த வெள்ளியன்று புத்தளம் மாவட்டம் ஆனமடுவ நகரிலுள்ள சிறுவர் பூங்காவிற்கு அருகில் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து புத்தளம் பொலிஸ் அத் தியட்சகர் காரியாலய குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வர்த்தகர் தகவல் கொடு த்துள்ளார். குறிப்பிட்ட தினத்தன்று வர்த்தகர் போன்று மாற்று உடைத்தரித்த பொலிஸ் அதிகாரியொருவர் பணப் பையுடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றிருந்தார்.

உரியவர்களைச் சந்தித்தபின் பணங்கள் பரிமாறப்பட்டபோது மறைந்து நின்ற பொலிஸார் திடீரென பாய்ந்து இருவரையும் கைது செய்தனர். பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இதில் இன்றுமொரு வேடிக்கை என்னவென்றால் அவர்கள் கொண்டு வந்த போலி நாணயத் தாள்கள் கட்டுக் கட்டாக வைக்கப்பட்டிருந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகம் சம்பாதிக்கும் மெடோனா..!!
Next post கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க இரத்தக் கையெழுத்து..!!