பட்டம் விட்ட சிறுவன் உயிரிழப்பு..!!
Read Time:1 Minute, 25 Second
பட்டம் பறக்க விட்டுக்கொண்டிருந்த 5 வயதுச் சிறுவன் ஒருவன் கைவிடப்பட்டுள்ள நெல் வயலில் உள்ள குழி ஒன்றினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.
கொழும்பு நவகமுவ, கொத்தலாவலபுர பகுதியிலேயே நேற்றுமாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சிறுவன் திரும்பி வராததைத் தொடர்ந்து சிறுவனை பெற்றோர் தேடிச் சென்றபோது, இந்தச் சிறுவனின் பாதணிகளில் ஒன்று குறித்த குழிக்கு அருகில் காணப்படுவதை அவதானிததுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரதேசவாசிகளின் உதவியுடன் குழியிலிருந்து இந்தச் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைவிடப்பட்டுள்ள நிலங்களிலோ அல்லது கடற் கரையோரங்களிலோ அல்லது வெளியிடங்களிலோ பாடசாலை விடுமுறைக் காலத்தில் பிள்ளைகள் பட்டங்களை பறக்கவிடும்போது தங்களது பிள்ளைகள் குறித்து பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன எச்சரித்துள்ளார்.
Average Rating