கென்யாவில் பள்ளத்தாக்கில் பஸ் உருண்டு விழுந்து 41 பேர் உயிரிழப்பு..!!
Read Time:1 Minute, 33 Second
கென்ய தலைநகர் நைரோபியில் இருந்து ஹோமா பே நகருக்கு நேற்று நள்ளிரவு ஒரு பயணிகள் பஸ் புறப்பட்டுச் சென்றது.
இன்று அதிகாலை 2 மணியளவில் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது.
இந்த விபத்தில் 41 பேர் உடல் சிதறி பலியானார்கள். 27 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
நரோக் அருகில் நடந்த இந்த கோர விபத்து தொடர்பாக, போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், ‘இது மிகவும் கொடுமையான சம்பவம். அனைத்து பகுதிகளிலும் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. என்ன நடந்தது சரியாக கணிப்பது கடினம்.
ஆனால், அளவுக்கு அதிக பயணிகளுடன் வேகமாக சென்றதால் இந்த விபத்து நடந்திருக்கலாம். மலையில் மோதி புதர்களுக்குள் பஸ் சிக்கியிருந்ததால் உடல்களை மீட்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.
Average Rating