எலுமிச்சம் காய் தொண்டையில் சிக்கி 11 மாத குழந்தை மரணம்..!!
Read Time:56 Second
கேகாலை, வரக்காபொல, தியதுருபொல பிரதேசத்தில் பாட்டியின் பாதுகாப்பிலிருந்த 11 மாத ஆண் குழந்தையொன்று எலுமிச்சங்காய் தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குழந்தையின் தாயும் தந்தையும் அரச சேவையிலிருப்பதால் இவர்கள் கடமையிலிருந்து திரும்பும் வரை குழந்தையை பாட்டியின் பாதுகாப்பில் விட்டுச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குழந்தை ரகாபொல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Average Rating