பெற்றோர்கள் தலைமறைவு, மூன்று பிள்ளைகள் பொலிஸில் ஒப்படைப்பு..!!

Read Time:2 Minute, 21 Second

images (2)பெற்றோர்கள் தலைமறைவாகிய நிலையில் பாட்டியின் பராமரிப்பில் இருந்துவந்த மூன்று பிள்ளைகளையும் தொடர்ந்து தன்னால் பராமரிக்க முடியாதுள்ளதெனக் கூறி பாட்டி மூன்று குழந்தைகளையும் பதுளை பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

பதுளை வேவெஸ்ஸத் தோட்டத்தில் வசித்த பெண் ஒருவர் தனது 16, 14, 12 வயதுடைய மூன்று குழந்தைகளையும் தனது கணவனிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாடு சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கணவன் மூன்று குழந்தைகளையும் மனைவியின் தாயிடம் ஒப்படைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து மூன்று குழந்தைகளையும் பாட்டி பராமரித்து வந்த நிலையில் சுமார் ஒன்றரை வருடத்திற்கு பின்னர் இலங்கை வந்த குழந்தைகளின் தாயார் சில தினங்கள் குழந்தைகளுடன் தங்கியிருந்துவிட்டு அவரும் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மூன்று குழந்தைகளையும் பராமரித்து வந்த பாட்டி தன்னால் இயலாமல் போகவே நேற்று முன்தினம் பதுளை பொலிஸ் நிலையத்துக்கு வந்து பொலிஸாரிடம் மூன்று குழந்தைகளையும் ஒப்படைத்துள்ளார். தனக்கு குறித்த குழந்தைகளை தொடர்ந்து பராமரிக்க முடியாது எனக்கோரி அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து குழந்தைகள் மூவரும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டபோது நீதிமன்றம் அவர்களை சிறுவர் பாதுகாப்பு பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பதுளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேட்பாளரை வரவேற்று பட்டாசு வெடித்ததில் இரு பெண்கள் படுகாயம்..!!
Next post செக்ஸ் ஆசையைக் கூட்ட ஹிட்லர் செய்த வேலை..!!