வவுனியாவில் இளைஞன் குத்திக்கொலை..!!

Read Time:1 Minute, 39 Second

images (4)வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய வளாகத்தில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுந்தரபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் சதீஸ்வரன் என்ற 31 வயதானவரே இவ்வாறு இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பியிருந்த இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த சமயம் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் இன்றுகாலை அவரை உறவினர்கள் தேடியபோதே பாடசாலை வளாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக அக்கிராமத்தின் கிராம சேவகர் தெரிவித்துள்ளார்.

இவரது சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்து மதுப்போத்தல்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்த கிராம சேவகர் இவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை காணவில்லை என உறவினர்கள் தனக்கு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இக் கொலைச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டமைப்பு வேட்பாளர் வீட்டின்மீது தாக்குதல்..!!
Next post யாழ். மாநகரசபை பணியாளர்மீது பொலீசார் தாக்குதல்..!!