யாழ். மாநகரசபை பணியாளர்மீது பொலீசார் தாக்குதல்..!!
Read Time:1 Minute, 10 Second
யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவத்தின்போது கடமையிலிருந்த யாழ்.மாநகர சபைப் பணியாளரை பொலிஸார் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன்சிஹேரா பயணித்த வாகனத்தில் மோதும் படியாக கடமையிலிருந்த மாநகர சபைப் பணியாளரை பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார்.
இதனை கண்டித்து ஏனைய மாநகர சபைப் பணியாளர்கள் பொலிஸாரை சுற்றிவளைத்து போராட்டம் நடாத்தியுள்ளனர்.
இதனையடுத்து உயர் பொலீஸ் அதிகாரிகள் அங்குவந்து பேச்சு நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினால் ஆலயத்திற்கு பக்தர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
Average Rating