மேர்வின் நவிபிள்ளையை திருமணம் முடிக்கும் விவகாரம், மன்னிப்பு கேட்டது அரசு..!!
Read Time:1 Minute, 3 Second
அமைச்சர் மேர்வின் சில்வா விவகாரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
இலங்கை வந்துள்ள நவநீதம்பிள்ளையை, திருமணம் செய்ய விரும்புவதாக, அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
இதுபற்றிய வீடியோ ஆதாரங்களை ஐ.நா. அதிகாரிகள் நவநீதம்பிள்ளையிடம் அளித்துள்ளனர்.
இதனால் கடும் கோயம் அடைந்த அவர், தனது கண்டனத்தை இலங்கை அரசிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து இலங்கை அரசின் சார்பாக மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, வருத்தம் தெரிவித்ததுடன், நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
Average Rating