நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வவுனியாவிலிருந்து பாத யாத்திரை..!!

Read Time:1 Minute, 23 Second

download (8)வவுனியா வேப்பங் குளத்தில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு பாத யாத்திரை ஆரம்பமாகியுள்ளது.

வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து இன்று ஆரம்பமாகிய பாத யாத்திரை ஏ 9 வீதி வழியாகச் சென்று அவ் வீதிகளில் உள்ள ஆலயங்களில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு எதிர்வரும் நான்காம் திகதி நல்லூர் ஆலயத்தில் இடம்பெறும் தேர்த் திருவிழாவுடன் இணையவுள்ளது.

நாட்டில் அமைதி வேண்டியும் சாந்தி சமாதானம் வேண்டியும் இடம்பெறும் நடை பாத யாத்திரையின் ஆரம்ப நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரன், வவுனியா பிரதேச செயலளர் எஸ்.உதயராசா, கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன், வவுனியா தமிழ் சங்க தலைவர் தமிழருவி சிவகுமாரன் உள்ளிட்ட பெருந்தொகையான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேவல்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவினால் விடுவிப்பு..!!
Next post பறவை பிடித்து தருவதாக கூறி சிறுவன் துஷ்பிரயோகம்..!!