பறவை பிடித்து தருவதாக கூறி சிறுவன் துஷ்பிரயோகம்..!!
14 வயதான ஆண் பிள்ளை ஒருவரை கடுமையான முறையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கெண்டுள்ளதாக வனாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவன் வனாத்தரமுல்லுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
சிறுவனது வீட்டிற்கு அருகில் ஆலயம் ஒன்று இருந்ததாகவும், அவ்வாலயத்திற்கு சிறுவன் தினமும் பணிவிடை செய்வதற்காக செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினத்தன்றும் சிறுவன் ஆலயத்திற்கு சென்றவேளை பறவை ஒன்றை பிடித்து தருவதாகக் கூறி அந்நபர் சிறுவனை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வைத்திய பரிசோதனைகளுக்காக சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் வனாத்தவில்லுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating