மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது..!!
Read Time:1 Minute, 12 Second
14 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை ஏமாற்றி வல்லுறவிற்கு உற்படுத்தியதாக கூறப்படும் 23 வயதுடைய இளைஞனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மாணவியை மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள பிரதேசத்திற்கு கூட்டிச் சென்றே இந்த குற்றத்தை அவர் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞனை வத்துகாமம் பொலிஸாரே நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக கண்டி வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வத்;துகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating