கொள்ளைச் சந்தேகநபர் கைது..!!
Read Time:1 Minute, 6 Second
நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற வாகன கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பேராதனை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நபர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் இதற்கு முன்னதாகவும் பல தடவைகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது இதற்கு முன்னர் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக் கைது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating