கிளிநொச்சியில் கார் கொள்ளையர் இருவர் கைது..!!
Read Time:1 Minute, 6 Second
கிளிநொச்சி பிரதேசத்தில் 106,000 பெறுமதியான காரைக் கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இவ்விரு சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட காரும் இவர்களிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவேளை, ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Average Rating